சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
Woman Body Founded in Kallakurichi
சாக்கில் பெண் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் , புதூரில் சுடுகாடு ஒன்று உள்ளது. இங்கு பள்ளம் தோண்டியதற்கான அடையாளம் காணப்பட்டது. அதனை கண்ட அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அந்த இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்தனர்.
ஆனால் நான்கு நாட்கள் ஆகியும் தாசில்தார் வராததால் அந்த பகுதி கிராம மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து தாசில்தார் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.
அப்போது அதில் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது அதனை பிரித்து பார்த்தபோது 45 வயது மதிக்கதக்க பெண் சடலம் உடலில் காயங்களுடன் இருந்துள்ளது. அவரின் உடலை சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மீண்டும் அதே இடத்தில் அந்த பெண்ணின் உடல் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிககியில், மர்ம நபர்கள் அந்த பெண்ணை கொலை செய்த சாக்குமூட்டையில் கட்டி இருக்கலாம் என தெரிவித்தனர் அந்த பெண் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Woman Body Founded in Kallakurichi