கள்ளகாதலுக்கு இடைஞ்சல்...!! கள்ளகாதலுனுடன் இணைந்து கணவனை கொன்ற இளம்பெண்..!!
Woman arrested killing his husband due to illegal love affair
கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவியையும் அவரது கள்ள காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், துப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீசன் (40). இவருக்கு திருமணாமகி நதியா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவரின் மனைவி நதியாவும் அந்த பகுதியில் இருக்கும் கோவிந்தராசுவும் பழகி வந்தனர்.
இந்த பழக்கம் நாளைடவில் கள்ளகாதலாக மாறியது. இந்த விவகாரம் ஜெகதீசனுக்கு தெரியவரவே அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தங்கள் பழக்கத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் தங்கள் கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய நதியா முடிவெடுத்துள்ளார். இதற்கு கள்ளகாதலன் கோவிந்தராசுவும் சம்மதித்துள்ளார்.
சம்பவதன்று செல்வராசுக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது கள்ளகாதலனை வர சொல்லி மண்வெட்டியால் சரமாறியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
English Summary
Woman arrested killing his husband due to illegal love affair