குடித்து விட்டு தினமும் தகராறு..!! கொதிக்கு எண்ணெயை கணவன் மீது ஊற்றிய மனைவி...!!
Woman arrested due to killing his husband
குடும்பதகராறு காரணமாக கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ஏ.எஸ். பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் (50). இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், தங்கராஜ் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
இதனால் வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் செல்வராணி நடத்தி வரும் பலகார கடையில் இருந்து பணத்தை திருடியுள்ளார் அதனை தட்டிகேட்ட செல்வராணியையும் தாக்கியுள்ளார்.
இதில் ஏற்பட்ட சண்டையில் பலகாரம் செய்ய வைத்திருந்த எண்ணெயை கணவர் மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் தங்கராஜ் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் செல்வராணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
English Summary
Woman arrested due to killing his husband