விழுப்புரம்: கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவி தற்கொலை.!
Wife suicide in Villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ஓட்டுநர் ஆபிரகாம் (24). இவரது மனைவி சிவஜோதி(20). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதைடுத்து கணவன்-மனைவி இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனவேதனை அடைந்த சிவஜோதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிவஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு:
[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள்:
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]
English Summary
Wife suicide in Villupuram