கணவன் கூறிய ஒற்றை வார்த்தையால்... விபரீத முடிவெடுத்த மனைவி.!  - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகே பழவிலை இலங்கை அகதிகள் முகாமில் இந்திராணி-ஜோன்ஜீனத் என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று இவர்களுக்கு இருந்துள்ளது.

கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. பல முறை கண்டித்தும் அவன் திருந்தவில்லை. இதன் காரணமாக மன வேதனை அடைந்த இந்திராணி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்திராணியின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், "இந்திராணியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவருடைய கணவர் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக இந்திராணியை அடித்துக் கொன்றார் என்றும், கூறப்பட்டிருந்தது.

மேலும், இது குறித்து உள்ளூர் காவல்துறையிடம் தெரிவித்தாலும், அவருடைய மனுவை ஏற்க மறுத்து உள்ளூர் காவல் துறையினர் கிழித்துப் போட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்திராணியின் மரணத்திற்காக உண்மையான காரணத்தை காவல்துறையினர் விசாரித்து தூக்கு தண்டனை தர வேண்டும்." என கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife suicide in nagarkovil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->