கணவரிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவரிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பிரியாட்டுக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி(23). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த தனலட்சுமி வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துள்ளார்.

இதையடுத்து தனலட்சுமி மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தனலட்சுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife suicide in kirishnagiri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->