கணவன் செய்த மோசமான காரியம்.! ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண்.!
wife suicide in chennai avadi
சென்னை ஆவடி அருகே இருக்கும் சிஆர்பிஎஃப் பிருந்தாவன் நகரை சேர்ந்த ராஜா என்பவருக்கு ராதா என்ற மகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் சாலி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த மாதம் வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான ஒரு சில நாட்களிலேயே பாலாஜி குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து இருக்கின்றார். மேலும், ராதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக ராதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து பாலாஜியின் தந்தை முஸ்தபா ராதாவின் தந்தையிடம் சென்று என் மகளுக்கு திருமணம் செய்த பின்னர் உங்களுடைய மகளை முறைப்படி திருமணம் செய்து அழைத்துச் செல்கிறேன் என்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.
இதன் காரணமாக ராதா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பாலாஜி தன்னுடைய காதல் மனைவியுடன் பேசுவதை முழுவதுமாக நிறுத்தி இருக்கின்றார். எனவே, ராதா கணவரை பார்க்க அவருடைய வீட்டிற்கு செல்ல பாலாஜியும், முஸ்தபாவின் சேர்ந்து ராதாவை அடித்து அவமானப் படுத்தி இருக்கின்றனர். இதன் காரணமாக தாய் வீட்டிற்கு திரும்பிய ராதா வீட்டிலிருந்த அனைவரும் தேவாலயம் சென்ற நிலையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.
திரும்பி வந்த குடும்பத்தினர், ராதாவின் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் தகவலறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
wife suicide in chennai avadi