கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரை சேர்ந்தவர் சுருளிராஜன். இவரது மனைவி பிரியா (30). இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுருளிராஜன் பிரியாவை திட்டியுள்ளார்.

இதனால் பிரியா கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பிரியாவின் உடலை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருமானூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife suicide due to family problem in Ariyalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->