கணவனின் சந்தேகம்.. கருவை கலைக்க சொன்னதால் காதல் மனைவி துணிகரம்..! - Seithipunal
Seithipunal


நடத்தையில் சந்தேகித்த கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், விளத்தை கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் சென்னையில் வேலை செய்யும் போது சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுரேகா 4மாத கர்பமாக இருக்கிறார். ஆனால், மதுவுக்கு அடிமையான சந்தோஷ் மனைவியை சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார்.

இந்நிலையில், சம்பவதன்று குடித்து விட்டு கர்பத்திற்கு காரணம் யார் ? என சந்தேகித்த அவர் கருவை கலைக்க சொல்லி அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேகா காய்கறி வெட்டும் கத்தியால் சந்தோஷை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து சுரேகாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife kills her husband Near Kallukurichi


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->