கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை கொலை.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சேதுபதி. இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சேதுபதி அங்கு இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக சேதுபதியை காணாத நிலையில், நேற்றிரவு, ஆண் நண்பரான சதீஷ்குமாருடன் பிரியா தண்ணீர் ட்ரம் ஒன்றை தள்ளி கொண்டு சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசவே துக்கத்தில் இருந்துவர்கள் எழுந்து வந்து டிரம்மில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். அவர்கள் திருதிருவென விழித்ததால் சந்தேகமடைந்த அவர்கள் டிரம்மை திறந்து பார்த்த போது சேதுபதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல அளித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சதீஷ்குமாருக்கும் பிரியாவிற்கும் இடையில் கள்ளதொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த சேதுபதி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், பிரியா அதனை கண்டு கொள்ளாமல் தனது உல்லாச வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று பிரியா மற்றும் சதீஷ்குமார் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த சேதுபதி இருவரையும் கண்டு ஆத்திரமடைந்த அவர் இருவருடனும் சண்டையிட்டுள்ளார்.

இதில் அருகில் இருந்த கட்டையால் பிரியா சேதுபதியை தாக்கவே அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவரின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசித்து அவர்கள் அங்கிருந்த தண்ணீர் டிரம்மில் வைத்துள்ளனர்.

5 நாட்கள் அந்த டிரம்மிலே உடல் இருந்ததால் அழுகி துர்நாற்றம் வீசவே அங்கிருந்து உடலை கொண்டு செல்ல முயன்ற போது மாட்ய்டி கொண்டதாக தெரிவித்தனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife kills her husband due to illegal affair Near Selam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->