கள்ளகாதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி.. நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..! - Seithipunal
Seithipunal


ஆண் நண்பருடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா. இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்  ரீனா என்ற பெண்னை திருமணம்  செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழுந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி ராஜா தற்கொலை செய்துகொண்டார் என ரீனா ராஜவின் சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவரவே அவர்கள் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரீனாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ரீனாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உறவினரான சதீஷ் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது.

இது கணவர் ராஜாவிற்கு தெரிய வரவே அவர்களை ராஜா கண்டித்துள்ளார். இதனால், இருவரும்  ராஜாவை கொலை செய்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife kills her husband due to illegal affair Near Coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->