எனது கணவரை இதற்காகத்தான் கொலை செய்தேன்...! கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வேலூர் மாவட்டதில் வாழ்ந்து வருபவர் சரவணன். இவர் சைக்கிள் கடை நடத்தி வந்தார். சரவணனின் மனைவி பவானி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து போதையில் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் சரவணனின் மனைவி கூறுகையில், கணவர் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறிவந்தார்.

இதை தொடர்ந்து, சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின் பிரேத பரிசோதனையின் ரிப்போர்ட் வந்தது. அதில் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கழுத்தை நெரித்தும், பயங்கரமாக தாக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

பின்னர் அவரே தனது கணவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் வேலாயுதம் என்பவரின் மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். பின்னர் எனக்கு வேலாயுதத்துடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவர் என் வீட்டிற்கு அடிக்கடி வந்து போவார். இதனால் தொடர்ந்து நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தோம், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் என்னிடம் தகராறு செய்ததால் வேலாயுதம் அவரை கண்டித்தார். ஆனால் அவர் அதையே தொடர்ந்து கொண்டிருந்தார்.

பின் என்னையும் வேலாயுதத்தையும் தவறாக பேசி வந்தார். இதனால் எங்கள் உறவிற்கு அவர் இடையூறாக இருப்பதால் கொலை செய்ய முடிவு செய்து, குடிபோதையில் இருந்த அவரை நானும் வேலாயுதமும் சேர்ந்த ஒயர் மூலம் கழுத்தை நெரித்து பிளாஸ்டிக் பைப் மூலம் அடித்தும் கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினோம் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் வேலாயுதம் மற்றும் பவானி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife kills her husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->