செங்கல்பட்டு அருகே பரிதாபம்.! கணவன் கண்முன்னே ரயில் மோதி மனைவி பலி.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கணவன் கண்முன்னே ரயில் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த மணப்பாக்கம் தர்மராஜா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கலைச்செல்வி(40). இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருசூலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ரயிலில் திரிசூலம் வந்தனர்.

பின்பு அவர்கள் தண்டவாளத்தை கடக்கும் முயன்ற போது திடீரென கலைச்செல்வி கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் எழுவதற்குள் அவ்வழியாக வந்த ரயில் மோதி கலைச்செல்வி கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், கலைச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife killed in train collision in Chengalpattu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->