கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்த மனைவி!! கணவன் தூங்கும்போது மனைவி செய்த செயல்!!
wife killed her husband for his illegal affairs
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சி, மோடமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூங்கொடி என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது வேலை செய்யும் இடத்தில் கல்யாண சுந்தரத்திற்கும், அங்கிருக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பூங்கொடிக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பூங்கொடி தன் கணவனை சந்தித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கலயாண சுந்தரம் இனிமேல் என்னுடன் நீ வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் பூங்கொடிக்கு கணவன் மீது அதிகப்படியான சந்தேகமும், ஆத்திரமும் வந்துள்ளது. இந்தநிலையில் பூங்கொடி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை கத்தியால் சரம்வாரியாக வெட்டியுள்ளார். இதனையடுத்து வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக தன் கணவர் கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பூங்கொடியுயிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பூங்கொடி முன்னுக்கு, பின்னாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பூங்கொடியை கைது செய்தனர்.
English Summary
wife killed her husband for his illegal affairs