திருமணத்திற்கு முன் காதலனுடன் உல்லாசம்., பின் கணவனுடன் உல்லாசம்.! மோகத்தால் வெளியான ஆபாச காணொளிகள்.!!
wife hot photo release husband is shocked
திருவண்ணாமலையில் வீரமணி என்பவர் பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடையில் கீழ்பெண்ணாத்தூர் சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கும் வீரமணிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
வீரமணி அந்த பெண்ணை மயக்கி நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். அந்தப் பெண் வீரமணியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு உள்ளார். ஆனால் வீரமணி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
தற்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவரின் செல்போனுக்கு வீரமணி வாட்ஸ்அப் மூலம் அப் பெண்ணின் ஆபாச படங்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், அப்பெண்ணை அவரது தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு உன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் வீரமணியை கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
English Summary
wife hot photo release husband is shocked