அன்பு கணவனின் சட்டை பையில் இருந்த கள்ளகாதலின் சாட்சி!. மனைவி எடுத்த விபரீத முடிவு!. - Seithipunal
Seithipunal



சென்னை மணலியை சேர்ந்தவர் பார்த்திபன் என்பவர் பாரிமுனையில் கப்பல் நிறுவனம் நடத்தி வருகிறார். பார்த்திபன் அவரது மனைவி விக்னேஸ்வரி மற்றும் அவர்களின் 2 பெண் குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார்.

இந்தநிலையில் பார்த்திபனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் அவரின் மனைவி விக்னேஸ்வரிக்கு தெரிந்ததால், அவர்களின் தொடர்பை கைவிடும்படி பல முறை கணவரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் பார்த்திபன் அந்த பெண்ணுடன் தொடர்ந்து கள்ளக்காதலை மேற்கொண்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று பார்த்திபன் அணிந்திருந்த சட்டையில் கள்ளக்காதலியின் மகனுடைய ஆதார் அட்டை  இருந்துள்ளது. அதை எடுத்துப்பார்த்த பார்த்திபனின் மனைவி அதிர்ச்சியடைந்தார்.  அந்த  ஆதார் அட்டையில் சிறுவனின் தந்தை பெயர் பார்த்திபன் என்று இருந்துள்ளது. 

இதனை பார்த்து கொந்தளித்த விக்னேஸ்வரி கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத விக்னேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, விக்னேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஸ்வரியின் உறவினர்கள், விக்னேஸ்வரியின் சாவுக்கு காரணமான பார்த்திபனை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தில் போராட்டம் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife got suicide for her husband illegal affairs


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->