வரதட்சணை கேட்டு கணவன் வற்புறுத்தல்.! மனைவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு கணவர் வற்புறுத்தியதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கோகிலா(23). இவரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி (25) என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், குருமூர்த்தி மனைவியிடம் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கோகிலா, விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து கோகிலாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோகிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோகிலாவின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife commits suicide in Virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->