கணவரிடைய ஏற்பட்ட தகராறு.! மனமுடைந்த மனைவியின் விபரதம் முடிவு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் கணவரிடையே ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் செங்காட்டுப்பட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் (37). இவரது மனைவி சுதா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரமும் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சுதா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் சுதாவை சமாதானம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இருப்பினும் மனவேதனை அடைந்த சுதா வாழ்க்கையில் வெறுப்படைந்து, நேற்று அவரது தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த துறையூர் போலீசார், உயிரிழந்த சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife commits suicide in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->