கூலிப்படை ஏவி கணவனை கொல்ல முயன்ற மனைவி... காவல்துறையிடம் சிக்கி கொள்வோம் என பயந்துன் தற்கொலை..!
Wife commits suicide after trying to kill mercenary avi husband
கணவனை கூலிபடை ஏவி கொலை செய்ய முயன்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்தவர் கௌதமன். இவருக்கு கடந்த மாதம் புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புவனேஸ்வரி கடந்த 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. புவனேஸ்வரி இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனால், கணவனை கொலை செய்ய முயன்ற புவனேஸ்வரி தனக்கு தெரிந்தவர்களை கூலிப்படையாக நியமித்து கணவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனது நகைகளை அடகு வைத்து கூலிப்படைக்கு 75 ஆயிரம் ரூபாய் அளித்துள்ளார். மேலும் , கடந்த 2ம் தேதி கணவனிடம் ஆசை வார்த்தை கூறி அவரை வெளியில் அழைத்து சென்றுள்ளார். அப்போது காரை மோதி கொலை செய்ய முயன்று செய்தனர்.
சுதாரித்து கொண்ட அவர் உயிர்தப்பினார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரின் பதிவெண் கொண்டு அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், காவல்துறையினர் தங்களை கண்டுப்பிடித்து விடுவார்களோ எனபுவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wife commits suicide after trying to kill mercenary avi husband