11 ஆண்டுகளுக்கு முன் கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி.. காவல்துறை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!
Wife arrested for killing husband 11 years ago
கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி 11 ஆண்டுகளுக்குப் பின்பு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் உள்ள ஜமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். கடந்த 2011ஆம் ஆண்டு மதுபோதையில் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தி அவரை தள்ளிவிட்டதில் தலையின் பின்புறம் அடிபட்டு இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து ஜெயந்தி மற்றும் அவரது சகோதரி தந்தை ஆகிய குணசேகரன் அவர்களின் தோட்டத்தின் அருகே புதைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் குணசேகரன் சகோதரி தனது தம்பியை பார்க்க முடியவில்லை என ஜெயந்தியிடம் கேட்டபொழுது அவர் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையதாக அதனால் கேரளாவிற்கு சென்று அங்கு வேலை பார்த்து வருவதாகவும் அடிக்கடி போனில் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது சகோதரி காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது .
மேலும் புதைத்த பிணத்தை எரியூட்டி அதை ஆற்றில் கரைத்த தாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wife arrested for killing husband 11 years ago