எல்லையை கடந்த காதல்.. காதலனை கரம்பிடிக்க கள்ளத்தோணியில் வந்து, கம்பி என்னும் சோகம்.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்கம் மாநிலத்தை சார்ந்தவர் ஷாஷி ஷேக் (வயது 28). இவருக்கு முகநூல் மூலமாக வங்கதேசம் நாட்டினை சார்ந்த பாபியகோஸ் (வயது 22) என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

காதலரை கரம்பிடிக்க நினைத்த பெண்மணி, பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். இதன்பின்னர் காதல் ஜோடிகள் தமிழகத்திற்கு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சியில் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இதனைத்தொடர்ந்து மீஞ்சூர் அருகேயுள்ள பத்மாவதி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தம்பதி வசித்து வந்த நிலையில், ஷாஷி ஷேக் அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தனது மகளை காணவில்லை என பெண்ணின் தந்தை வங்கதேச காவல் நிலையத்தில் புகார் அளித்துளளார். இது தொடர்பான விசாரணைக்கு பின்னர், பெண்மணி மீஞ்சூரில் வசித்து வருவதாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் குற்றப்பிரிவு புலனாய்வு துறை அதிகாரிகள் பப்பியக்கோசை கைது செய்துள்ளனர். தற்போது காதலரை கரம்பிடித்து வாழ்ந்து வந்த பெண்மணி, சட்டத்தை மீறியதால் சிறையில் உள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Love girl Illegal Entry India Arrest by Kanchipuram CBCID police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->