2,328 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நலத்திட்ட உதவிகள்..! - Seithipunal
Seithipunal


 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலம் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 

இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்.குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைகவசம், முககவசம், பாதுகாப்பு காலணி, வெல்டிங் முககவசம், ஜாக்கெட், மின் பாதுகாப்பு காலணி, கையுறை (காட்டன்), ரப்பர் காலணி, மின் பாதுகாப்பு கையுறை, கண்கண்ணாடி, ரப்பர் கையுறை மற்றும் பை அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் 743 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சத்து 7 ஆயிரத்து 954 மதிப்பீட்டிலும் , பதிவு பெற்ற அமைப்புசாரா ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சீருடை, காலணி, முதலுதவி பெட்டி மற்றும் பை அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் 1034 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 31 ஆயிரத்து 803 மதிப்பீட்டிலும் மற்றும் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களுக்கு கல்வி, ஓய்வூதியம், திருமணம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 551 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 78 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலும் என மொத்தம் 2,328 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சத்து 18 ஆயிரத்து 7 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி), .பிரவீன் குமார், தொழிலாளர் இனை ஆணையர் . சுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி.), மலர்விழி உள்ளிட்ட  அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டு விழாவை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Welfare assistance to 2,328 workers to ensure safety


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->