நாளை மறுநாள் விடுமுறை., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெரியக்கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் கட்டட மற்றும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். அவரின் பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ராஜராஜ சோழனின் 1034 ஆண்டு சதய விழா, நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி புதன்கிழமை வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த இரு தினங்களில் ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 6 ஆம் தேதி அதாவது புதன்கிழமை ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழக அரசு சார்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாலை அணிவிக்க உள்ளார். இதனால் வரும் 6 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wednesdy leave announced by collector


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->