குற்றால அருவியில் ஏற்பட்ட மாற்றம்., சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!!
waterfall increased in kutralam
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த கன மழையால், நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்பொழுது குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் அங்குள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலை மோதி வருகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் ஐந்தருவி சாலையில் அருகே உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாம் கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட நிலையில், ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தண்ணீர் அங்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
waterfall increased in kutralam