தரமற்று செயல் படும் அதிகாரிகள்.,தடுப்பு சுவர் கட்டிய மூன்றே மாதத்தில் இடிந்தது.!!
wall fell down within 3 months of built
தமிழகத்தின், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் அருகில் ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட தடுப்புச் சுவர் 3 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் உடைந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெண்ணாற்றங்கரையோரம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஆத்தூர் கிராமத்துக்குள் மழைக்காலங்களில் ஆற்று நீர் புகுந்து சேதம் விளைவித்து வருகிறது. இதனால், பல வருடங்களாக நடந்த போராட்டத்துக்குப் பின்னர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்ச ரூபாய் செலவில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.
இதை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த சுவர் இடிந்து விழுந்ததாக தெரிய வந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால்தான் சுவர் இடிந்து விழுந்ததாக கிராம மக்கள் கூறினார்கள்.
இதை தொடந்து, சுவரைக் கட்டிய ஒப்பந்ததாரர் மீதும் சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்க முயன்றபோது, பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
English Summary
wall fell down within 3 months of built