தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி! நொடிப்பொழுதில் நிகழ்த்த பயங்கரம்!!
wall fell down girl injured
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளவடசேரி கனகமூம் சந்தையில் சிறுமி ஒருவர் சுவரின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அந்த சுவர் இடிந்து சிறுமியின் மேல் விழுந்துள்ளது.
இதனால் சிறுமி இடுக்குகளில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேற்றைய முந்தையநாள் அப்பகுதியில் கடுமையான மழை பெய்துள்ளது. இதனால் மழையால் ஊறிப்போய் சுவர் விழுந்திருக்கலாம் என்ற பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சுவர் இடிந்து விழுந்து சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
English Summary
wall fell down girl injured