வரலாற்றில் இன்று: கப்பலோட்டிய தமிழனின் நினைவு தினம்!!
vo chidambaram pillai memorial day 2019
வ.உ.சிதம்பரம்பிள்ளை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சிதம்பரம்பிள்ளை 1906ஆம் ஆண்டு, அக்டோபர் 16ஆம் தேதி சுதேசி கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், செயலராக வ.உ.சிதம்பரம்பிள்ளையும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை விடுதலைப்போரில் தீவிரப்பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதி வ.உ.சிதம்பரம்பிள்ளை மறைந்தார்.
English Summary
vo chidambaram pillai memorial day 2019