தேர்தல் முடிவுகளை பார்த்ததும், அந்தர் பல்டி அடிக்கும் விஷால்!! இறுதியில் செய்த காரியம்!!
VISHAL WISHES TO PM MODI
இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியானது அதிகப்படியான தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால், பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சுமார் 346 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும்., பிற கட்சிகள் 104 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக வெற்றி பெற்றது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக கட்சியினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழக ஆளுங்கட்சிக்கு எதிராக தன்னை முன்னிலை படுத்திய நடிகர் விஷால், தேர்தல் முடிவிற்கு பின்னர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது..