கோவில் பிரச்சனை தொடர்பாக இருதரப்பு மோதல்.. ஊரை முடக்கி காவல்துறை குவிப்பு.! - Seithipunal
Seithipunal


இராஜபாளையம் அருகே இருதரப்பினர் மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு, பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் அருகேயுள்ளது கோதைநாச்சியார்புரம் கிராமம். இங்கு வசித்து வரும் இருதரப்பு சமூகங்கள் இடையே கோவில் நடைபாதை தொடர்பாக பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த இருதரப்பும் அங்குள்ள மதுபான கடையில் மதுபானம் வாங்கி வேறொரு இடத்தில மதுபானம் அருந்திய சமயத்தில், இவர்களுக்குள் மீண்டும் போதையில் கோவில் நடைபாதை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருதரப்பும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த மோதல் சம்பவத்தின் போது பிரியங்கா என்ற பெண்மணிக்கு தலையில் அரிவாள் வெட்டும் விழுந்துள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பிரச்சனை முடிந்தது என்று நினைத்த நிலையில், இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை ஏற்பட்ட தகராறின் போது ராஜகுரு என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கோதைநாச்சியார்புரம் கிராமத்தில் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊருக்குள் பிறர் செல்லவும், ஊருக்குள் இருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் 7 பேரை கைது செய்துள்ள நிலையில், பிரச்சனையை சுமூகமாக பேசி முடிக்க ஊர் பெரியவர்கள் மூலமாக கூட்டம் நடத்தவும் காவல் துறையினர் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar Rajapalayam Caste Problem Fight 2 Injured Police Imposed village Under Control 144 Section Act


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->