இராஜபாளையம்: மின்வாரியத்தின் அலட்சியத்தால் மகனை காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி.!
Viruthunagar Rajapalayam Aavarampatti man died Electric Attack 6 July 2021
மின்கம்பியை தொட சென்ற மகனை காப்பாற்றச்சென்ற தந்தை பலியான சோகம் அரங்கேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியை சார்ந்தவர் திருமுருகன். இவரது 5 வயது மகன் வீட்டிற்கு அருகே தொங்கிக்கொண்டு இருந்த மின்கம்பியை தவறுதலாக பிடித்து இருக்கிறான்.
இதன்போது, மின்சாரம் பாய்ந்து சிறுவன் அலறவே, இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த திருமுருகன் விரைந்து சென்று சிறுவனை தள்ளவிட்டுள்ளார். இதனால் சிறுவன் சில அடி தூரம் தள்ளி விழுந்து உயிர் தப்பிக்கவே, திருமுருகன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
உடலில் மின்சாரம் பாய்ந்த திருமுருகன் தூக்கி வீசப்படவே, அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
திருமுருகனின் மகன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறான். இந்த விஷயம் தொடர்பாக திருமுருகனின் மனைவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கையில், " தங்களின் பகுதியில் 20 இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து தொங்குகிறது என்றும், இது குறித்து புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் உயிர் பலியாகியுள்ளது என்றும், திருமுருகனின் வீட்டருகே மின்சார கம்பி தொங்குவது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை " என்றும் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Viruthunagar Rajapalayam Aavarampatti man died Electric Attack 6 July 2021