மனைவியுடன் பேசிய நபர்.. மதுபோதையில் கொடூரமாக அரங்கேறிய சம்பவம்...!!
Viruthunagar murder case police investigation
விருதுநகரில் மது போதையில் சந்தேகத்தின் அடிப்படையில் கொடூர கொலை அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பெரியபல்லப்பட்டி வீரபாண்டி. இவரது மனைவியின் பெயர் முனீஸ்வரி.
சம்பவத்தன்று முனீஸ்வரியுடன், அதே பகுதியை சார்ந்த சேதுராஜ் என்பவர் பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் மீது சந்தேகம் கொண்ட வீரபாண்டி, நேற்று இரவு நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும், சேதுராஜை கொலை செய்யும் நோக்கத்தோடு, தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து சேதுராஜின் இல்லத்திற்கு சென்று அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சேதுராஜ் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மகனை அரிவாளால் வெட்டுவதை கண்ட சேதுராஜின் தந்தை ஸ்ரீனிவாசன் தடுக்க முற்படவே, சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாசன் பலியாகியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வீரபாண்டி மற்றும் அவனது கூட்டாளிகள் நால்வரை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Viruthunagar murder case police investigation