#தமிழகம் | காவல் நிலையத்தில் வைத்து பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை!
Viruthunagar lady Police
விருதுநகர் : காவல் நிலையத்தில் வைத்து பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார், பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அடுத்துள்ள ஆவியூர் பகுதியில் காவல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளராக வீரணன் என்பவரும், காவலர் கண்ணன் என்பவரும், காவல் நிலையத்தின் வரவேற்பாளராக பெண் காவலர் லலிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் துணை கண்காணிப்பாளர் வீரணன், காவலர் கண்ணன் ஆகியோர், பெண் காவலர் லலிதாவிற்கு தொடர்ந்து பாலியல் தொழில் கொடுத்ததாக சொல்லப்படுகிறது .
இது குறித்து பெண் காவலர் லலிதா , மதுரை சரக டிஐஜி இடம் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் பேரில் தற்போது போலீஸ் சூப்பிரண்ட் மனோகரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே துணை காவல் ஆய்வாளர் வீரணன் மற்றும் காவலர் கண்ணன் ஆகிய இருவரும் ஆயுதப் படைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இருவர் மீதும் விசாக கமிட்டி விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் அறிவித்துள்ளார்.