குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் அருந்தி தற்கொலை... விருதுநகரில் சோகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் போத்திரெட்டிபட்டி பகுதியை சார்ந்த மாரிக்கன்னு. இவரது மனைவியின் பெயர் சங்கரேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், திருமணம் நடைபெற்ற தினத்தில் இருந்து தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்று இவர்களுக்குள் வழக்கம்போல தகராறு ஏற்படவே, கடும் விரக்தியடைந்த மாரிக்கன்னு, தானும் விஷம் அருந்தி, தனது குழந்தைக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இருக்கன்குடி காவல் துறையினர், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar father killed child by poison and father suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->