மழைக்கு மரத்திற்கு கீழ் ஒதுங்கிய தந்தை - மகன் மின்னல் தாக்கி உயிரிழந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


அருப்புக்கோட்டை அருகே காடுகளில் ஆடு மேய்க்கச் சென்ற தந்தை-மகன் மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சுக்கிலநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூரப் பாண்டியன். இவரது மகன் ராஜேஷ். இவர்கள் இருவரும் நேற்று அருணாசலபுரம் காட்டுப் பகுதியில், ஆடுகளை மேய்க்க சென்றுள்ளனர். 

இதன்போது பலத்த இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்த நிலையில், மழையில் நனையாமல் இருக்க இருவரும் அங்குள்ள பெரியண்ணசாமி கோவில் மரத்தடியில் ஒதுங்கி இருக்கின்றனர். இந்த சமயத்தில், பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது. 

மரத்திற்கு அருகே மின்னல் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலையும் மீட்ட காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar Arupukkottai Father Son Died Lightening Attack 15 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->