வாக்கு செலுத்த வருகையில் சோகம்... லாரி - வேன் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்து 3 பேர் பலி.!
Virudhunagar Watrap Voters 3 Person Died Accident When They Coming From Coimbatore
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மாத்தூர் பகுதியை சார்ந்த பெண்கள் உட்பட 9 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். ஏப்ரல் 6 ஆம் தேதியான இன்று வாக்குச்செலுத்த சொந்த ஊருக்கு வேனில் வந்துள்ளனர்.
இவர்களின் வாகனம் இன்று காலை மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அல்லிகுண்டம் பெட்ரோல் பங்க் அருகே வருகையில், எதிரே அட்டை ஏற்றிவந்த லாரியின் மீது நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், வேனின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், மோதிய வேகத்தில் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த மாத்தூரை சார்ந்த முத்துப்பாண்டி, கூமாபட்டி பகுதியை சார்ந்த லிங்கம், பாறைப்பட்டி பகுதியை சார்ந்த கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
மேலும், வாகனத்தில் பயணம் செய்த தமிழரசி, முத்து, சுந்தர மூர்த்தி, முத்துமாரி, ஸ்ரீதர், ஹரிராம் மற்றும் லாரி ஓட்டுநர் பீர் முகம்மது ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த பேரையூர் காவல் துறையினர், அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உசிலம்பேட்டை மற்றும் டி.கல்லுப்பட்டி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாலும், தீ கட்டுக்கடங்காமல் எரிந்து லாரி முற்றிலும் தீக்கு இறையாகியது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar Watrap Voters 3 Person Died Accident When They Coming From Coimbatore