மணற்கடத்தலை தட்டிக்கேட்ட துணை வட்டாட்சியர்.. மரணபயம் காண்பித்த கும்பல்.. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சுழியில் மணற்கடத்தலை தட்டிக்கேட்ட துணை வட்டாட்சியரின் வாகனத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி துணை வட்டாட்சியர் சிவனாண்டி. திருச்சுழி சுற்றுவட்டார பகுதியில் மணற்கொள்ளை நடந்து வந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதியன்று மணற்கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சிவனாண்டி கண்டுள்ளார். 

இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு, அவர் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றும் பலனில்லை. இந்நிலையில், நேற்று மணற்கொள்ளையில் ஈடுபட்ட லாரியை சிவனாண்டி கண்ட நிலையில், அதனை விரட்டி பிடிக்க முயற்சி செய்துள்ளார். 

ஆனால், இது பலனளிக்காமல் போகவே, வட்டாட்சியரின் காரில் விரைந்து சென்று, அங்குள்ள குலசேகரநல்லூர் பகுதியில் மடக்கியுள்ளனர். மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த துணை வட்டாட்சியரின் வாகனத்தை 3 பேர்கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. 

இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Tiruchuli Assistant VAO death Warn by Sand Smuggling gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->