விருதுநகர்: அம்பேத்கார் புகைப்படத்தை அவமதித்த போதை இளைஞர்கள்.. கலவரத்தை தடுக்க காவல்துறை குவிப்பு.!
Virudhunagar Srivilliputhur Two Caste Fight Police Protection Implemented 3 June 2021
அம்பேத்கார் பிளக்ஸ் பேனரை கிழித்து, வாகனத்தின் பின்புறம் கட்டி இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி கிராமத்தில் உள்ள கோவிலில் ஒரு சமூகத்தினர் திருவிழா கொண்டாடியுள்ளனர். இதன்போது, திருவிழா கொண்டாடிய தரப்பினர், மது அருந்தியிருந்த நிலையில், போதையில் மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு வந்த மதுபோதை ஆசாமிகள், அங்கிருந்த அம்பேத்காரின் பிளக்ஸ் பேனரை கிழித்து, அதனை வாகனத்தின் பின்புறத்தில் கட்டி சாலையில் இழுத்தபடியே வாகனத்தை இயக்கி சென்றுள்ளனர்.
இதனைக்கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து அம்பேத்காரின் புகைப்படம் உள்ள பிளக்ஸ் பேனரை கிழித்து இழுத்து சென்ற இளைஞர்கள் குறித்து விசாரித்துள்ளனர்.
இதன்போது, அங்குள்ள மற்றொரு தரப்பினரின் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அந்த தரப்பை சார்ந்த இளைஞர்கள் அஜித் மற்றும் பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கவே, தலைமறைவாக உள்ள ஒருவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
மேலும், இருதரப்பும் வெவ்வேறு சமுதாயங்கள் என்பதால் அப்பகுதியில் மோதல் வெடிக்கும் அபாயம் இருக்கும் காரணத்தால், பாதுகாப்பு கருதி நத்தம்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar Srivilliputhur Two Caste Fight Police Protection Implemented 3 June 2021