இரண்டு கிராமங்களுக்குள் சண்டை... சமாதான பேச்சுவார்த்தையில் சம்பவம்.. உயிரை காப்பாற்ற நினைத்த பெண் காவலரின் மண்டை உடைப்பு.! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே இரண்டு கிராமங்களுக்கு இடையே நடந்த பிரச்சனையில் பெண்மணி ஒருவர் தீக்குளிக்க முயன்ற நிலையில், அதனை தடுக்க முயன்ற பெண் காவலரின் மண்டை உடைக்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வேண்டுராயபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்மைக்காலமாக ஆடு மற்றும் கோழிகள் திருடு போவதாக தகவல் வெளியான நிலையில், பக்கத்து கிராமமான துலுக்கப்பட்டியை சார்ந்த இளைஞர்கள் அங்கு சுற்றித்திறிந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் சந்தேகமடைந்த வேண்டுராயபுரம் பொதுமக்கள் அவர்களை தாக்கியதாகவும் தெரியவருகிறது. தாக்குதலில் காயமடைந்த சக்தி என்ற இளைஞர் மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தை கண்டித்து துலுக்கப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களில் பெண்கள் கணிசமாக இருந்ததால் பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது, மறியலில் ஈடுபட்ட பெண்மணி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுக்க, பாதுகாப்புக்கு வந்த பெண் காவல் அதிகாரி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்மணி வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிச் சென்ற சமயத்தில் அவரது மண்டை உடைக்கப்பட்டது. 

இந்நிலையில், காயமடைந்த பெண் காவலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த பகுதியில் வாழ்ந்துவரும் துலுக்கப்பட்டி - வேண்டுராயபுரம் மக்கள் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sivakasi Srivilliputhur Vendurayapuram Peoples Fight Police Officer Injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->