#BigBreaking: சிவகாசி அருகே மீண்டும் சோகம்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 5 பேர் கவலைக்கிடம்.!
Virudhunagar Sivakasi Near KALAIYARKURICHI Fire Work Factory Explodes 5 Injured
சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி காளையார்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெடிவிபத்தில், பட்டாசு ஆலையில் இருந்த 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து தரைமட்டமாகிய நிலையில், 5 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்து தங்கராஜ் என்பவரின் பட்டாசு ஆலையில் நடைபெற்றுள்ளது.
திருவில்லிபுத்தூர், சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Virudhunagar Sivakasi Near KALAIYARKURICHI Fire Work Factory Explodes 5 Injured