#Breaking: சிவகாசி அருகே சோகம்.. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. ஒருவர் பலி..!!
Virudhunagar Sivakasi Firework Factory Fire Accident 1 Died 31 July 2021 Breaking
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சோகம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு பரவலாக இருக்கும் பட்டாசு தொழிற்சாலையில் பலரும் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், அவ்வப்போது தீடீரென பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்படுத்தும், இதனால் மக்கள் பலியாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக கையாளாததே விபத்துக்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே இருக்கும் ஜமீன் சில்வார்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொழிற்சாலையின் ஒரு அறை கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி மற்றும் சுற்றுவட்டார தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு மீட்பு பணிக்கு விரைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Virudhunagar Sivakasi Firework Factory Fire Accident 1 Died 31 July 2021 Breaking