#Breaking: அச்சங்குளத்தை , சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!
Virudhunagar Sivakasi Another one Fire work Factory Struggled Accident Rescue Team Arrived
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் பட்டாசு ஆலை விபத்தில் கர்ப்பிணி பெண்மணி உட்பட 19 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில், 6 பேரின் உடல் அடையாளம் காண இயலாத வகையில் சிதைந்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகாசி, விருதுநகர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காக்கிவாடன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும், அங்கு வேலை நடந்ததா? எத்தனை பேர் பணியில் இருந்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Virudhunagar Sivakasi Another one Fire work Factory Struggled Accident Rescue Team Arrived