சாத்தூர்: அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு... காவல் அதிகாரி கற்குவேல் மீண்டும் கைது.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அடுத்தடுத்து நகை மற்றும் பணங்கள் கொள்ளை போனது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

ஆனால், எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போன நிலையில், நேற்று முன்தினம் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

இந்த விசாரணையில், சாத்தூர் ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் அதிகாரி கற்குவேல் அதிர்ச்சி திருப்பமாக கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அவர் தான் என்று உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல் அதிகாரி கற்குவேல் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

மேலும், முன்னதாக கடந்த 2019 ஆம் வருடத்தில் திருநெல்வேலியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கற்குவேலை பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள், பணியிடைநீக்கத்திற்கு பின்னர் பணியில் சேர்த்துள்ளனர். பணியாற்ற மாற்றம் அடைந்த கற்குவேல் அங்கும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sathur Police Officer Karkuvel Again Arrested Robbery Theft Case 13 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->