அனுமதியின்றி அலட்சியமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு.. வெடிவிபத்தில் 3 பேர் பலி.!!
Virudhunagar Sathur Firework Accident 3 Died 21 June 2021
அலட்சியமாக வீடுகளில் தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து இருக்கின்றனர். இதன்போது, எதிர்பாராத விதமாக பட்டாசுகள் தீப்பற்றிக்கொண்டு வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த நபர் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுவன் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், வீடுகள் நெருக்கமாக இருந்ததால், அடுத்தடுத்த 3 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சாத்தூர் காவல் துறையினர் 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். பிற 2 நபர்களை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar Sathur Firework Accident 3 Died 21 June 2021