மோட்டோகிராஸ் டிராக் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி.. இராசபாளையம் நெட்டிசன்கள் பளீர்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் நாய்களுக்கு பிரசித்தி பெற்ற ஊர் என்பது இந்தியாவே அறிந்த விஷயமாகும். அந்த வகையில், தற்போது அந்நகர வளர்ச்சிக்காக பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும், இராசபாளையம் நகர் மக்களின் நெடுநாள் கோரிக்கையான இராசபாளையம் - ஆலங்குளம் சாலையில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இராசபாளையத்தில் இருந்து ஆலங்குளம் சிமிண்ட்ஸ் மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள பல தொழிற்சாலைகளுக்கு இந்த சாலையே பிரதான சாலை ஆகும். 

தற்போது பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து மலையடிப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இப்பகுதி வழியாக அதிகளவு கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், ஏற்கனவே பள்ளம் மேடாக இருந்த சாலைகள் மேலும் மேடுபள்ளமாக மாறியது. 

சாலை பணிகள் நடக்கும் பகுதியை தவிர்த்து, பிற பகுதியிலாவது சாலையை அமைத்து தர கூறி ஊர் மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், இன்றுவரை நிறைவேறவில்லை. வெளிநாடுகளில் நடைபெற்று வரும் இருசக்கர வாகன பந்தயமான கரடு முரடனான இடங்களில் நடக்கும் மோட்டோகிராஸ் பந்தயம் போல சாலைகள் உள்ளது. 

இதனையடுத்து இராசபாளையத்தில் உள்ள நெட்டிசன்கள் மோட்டோகிராஸ் பந்தயம் நடக்க வழிவகை செய்து கொடுத்த தமிழக அரசிற்கு ஊர் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி என்று கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். இராசபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக திமுக கட்சியை சார்ந்த தங்கபாண்டியன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Rajapalayam Social Media Handlers Trend about Road Condition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->