சேத்தூர்: சளிக்கு நரம்பில் ஊசி?.. திருமணம் முடிந்த 42 ஆவது நாளில் துடிதுடிக்க உயிரிழந்த வாலிபர்.!
Virudhunagar Rajapalayam Seithur Youngster Died Wrong Treatment
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் ஜீவா நகர் பகுதியை சார்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் முகேஷ் (வயது 23). இவர் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு திருமனம் முடிந்து பூபாலா என்ற மனைவி இருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 42 நாட்கள் ஆகும் நிலையில், முகேஷ் தனது நண்பர்களுடன் தளவாய்புரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும், தனக்கு சளி மற்றும் ஜலதோஷம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த மருத்துவர் சோதனை செய்துவிட்டு, செவிலியரிடம் ஊசி போடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து செவிலியர் கையில் உள்ள நரம்பில் ஊசி போடவே, மருந்தை எடுத்துக்கொண்ட சிறிது நேரத்திற்கு உள்ளாகவே முகேஷ் வாந்தி எடுத்துள்ளார்.
இதன்பின்னர், இடுப்பிலும் மற்றொரு ஊசியை செவிலியர் செலுத்திய நிலையில், மருத்துவமனையை விட்டு வெளியே வருவதற்குள் மயங்கி விழுந்துள்ளார். விபரீதத்தை புரிந்துகொண்ட மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அவசர ஊர்தி ஏற்பாடு செய்து இராசபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக முகேஷின் தந்தை தளவாய்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Virudhunagar Rajapalayam Seithur Youngster Died Wrong Treatment