இராஜபாளையம் பி.ஏ.சி.எம் பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியர் ஜெ.பி என்ற ஜெயபிரகாஷ் காலமானார்.!
Virudhunagar Rajapalayam PACM Higher Secondary School Tamil Teacher Jayaprakash JP Passed Away 10 June 2021
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் நகரில் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 1950 ஆம் வருடம் ராம்கோ குழுமம் சார்பாக தொடங்கப்பட்டது. ராம்கோ குழுமம் சார்பாக இராஜபாளையம் நகரில் உள்ள பல பள்ளிகளில் பிரதான பள்ளியாக பி.ஏ.சி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் இராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சார்ந்த பல்வேறு ஏழை-எளிய மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இந்த பள்ளிக்கூடம் அரசு உதவி பெரும் பள்ளிக்கூடமும் ஆகும்.
இந்த பள்ளியில் பல ஆசிரியர்கள் பணியாற்றி வந்துள்ளார்கள். பள்ளி வகுப்பறைகளில் படிப்புகளை மற்றும் கற்றுக்கொடுக்காமல், வாழ்வியல் சூழ்நிலையை உணர்ந்துகொண்டு முடிவெடுக்கும் ஆலோசனைகளையும் தந்தை நிலையில் இருந்து பல ஆசிரியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில், பி.ஏ.சி.எம் பள்ளியின் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆசிரியர் திரு. ஜெயப்ரகாஷ். இவரை ஜெ.பி என்று தான் பள்ளியில் அழைப்பார்கள். மாணவர்கள் ஜெ.பி சார் என்று கூறுவார்கள். தமிழாசிரியர் ஜெ.பி பள்ளியில் பணியாற்றுகையில் மாணவர்களுக்கு தமிழ் பாடம் மட்டுமல்லாது, வாழ்வியலுக்கான சில ஆலோசனைகளையும் தினமும் தவறாது கூறிவிடுவார்.
மேலும், மாணவர்களிடம் அன்போடு எளிமையாக பழகும் பல ஆசிரியர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதனால் இவரது வகுப்பு நேரம் என்று கூறினாலே, மாணவர்களுக்கு அலாதி உற்சாகம் ஏற்பட்டு விடும். திருவில்லிபுத்தூருக்கு அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்த தமிழாசிரியர் ஜெயப்ரகாஷ், இன்று வயது மூப்பினால் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவரது மறைவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் பயின்ற பல மாணவர்களுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
எனக்கும் 9 ஆம் வகுப்பு எப் (F) பிரிவில் 2013 ஆம் வருடத்தில் தமிழ் பாடம் எடுத்த ஆசிரியர் என்ற முறையில், திரு. ஜெ.பி அவர்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar Rajapalayam PACM Higher Secondary School Tamil Teacher Jayaprakash JP Passed Away 10 June 2021