பூட்டிய விடுதி அறையில் தாய், தந்தை, மகன் தற்கொலை... இராஜபாளையத்தில் பெரும் சோகம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் குருவராஜா தெரு பகுதியை சார்நதவர் ஜனார்த்தன ராஜா (வயது 50). இவர் குவைத் மற்றும் மஸ்கட் போன்ற நாடுகளில் பணியாற்றிய நிலையில், தற்போது கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இவரது மனைவி கலாவதி (வயது 48). ஜனார்த்தன ராஜா - கலாவதி தம்பதியின் மகன் சித்தார்த் (வயது 17). சித்தார்த் கோவையில் பனிரெண்டாம் வகுப்பு பயிட்னர் வந்த நிலையில், இவர்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.

நேற்று முன்தினத்தின் போது, இவர்கள் மூவரும் இராஜபாளையத்திற்கு வந்திருந்த நிலையில், காமராஜர் நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், இரவு 11 மணியளவில் நண்பர்களுக்கு தொடர்பு கொண்ட ஜனார்த்தன ராஜா, குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, விரைந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு, அறையின் கதவை திறந்து பார்த்தபோது மூவரும் உயிருக்கு போராடியுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கலாவதி உயிரிழந்த நிலையில், ஜனார்த்தன ராஜா மற்றும் சித்தார்த் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில், இவர்கள் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், " நாங்கள் கடவுளிடம் செல்லப்போகிறோம். எங்களின் உடமைகள் மற்றும் உடலை உறவினரிடம் கொடுத்துவிடுங்கள். எங்களின் மரணத்திற்கு காரணம் யாரும் இல்லை " என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் அமோனியம் சல்பேட் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Rajapalayam Family Members 3 Person Suicide Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->