அதிமுக முன்னாள் கவுன்சிலர் விபத்தில் பலி.. சோகத்தில் அதிமுக தொண்டர்கள்.!
Virudhunagar Rajapalayam Draupati AIADMK 19 th Ward Counselor Died an Accident 1 May 2021
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் ஆவார். மேலும், அப்பகுதியில் இரண்டு முறை கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றியடைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு இராஜபாளையம் மயூரநாத சுவாமி கோவிலுக்கு, தனது நண்பர் முருக கேன்ஸ் (வயது 48) என்பவருடன் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்ற நிலையில், மாரியப்பன் வாகனத்தை இயக்கியுள்ளார்.
இராஜபாளையம் - மதுரை சாலையில் செல்கையில், எதிர்திசையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இராஜபாளையத்திற்கு பால் கேன் ஏற்றிவந்த கூட்டுறவு பால் சங்க வேன், இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இருசக்கர வாகனமும் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். மாரியப்பனுடன் சென்ற முருக கணபதி படுகாயமடைந்து, இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கூட்டுறவு சங்க பால் வேன் ஓட்டுநரான முதுகுடி கிராமத்தை சார்ந்த சக்திராஜன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரியப்பன் அவர் வசித்து வந்த பகுதி மக்களுடன் நட்புறவுடன் இருந்து வந்த நிலையில், அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உள்ளூர் அதிமுக தொண்டர்களும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar Rajapalayam Draupati AIADMK 19 th Ward Counselor Died an Accident 1 May 2021