இராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ முக்கிய கோரிக்கை..! குடிசை மாற்று வாரிய பணிகளை ஆய்வு செய்து பேட்டி.!! - Seithipunal
Seithipunal


குடிசை மாற்று வாரியத்தின் கீழ் நடைபெறும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ தங்கபாண்டியன், அதிகாரிகளுக்கு சில ஆலோசனை வழங்கி, பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக இராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " இராஜபாளையம் தொகுதி மேலப்பாட்டகரிசல் குளம் ஊராட்சி சமத்துவபுரம் அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு (864 வீடுகள்) அமைக்கும் பணியை குடிசை மாற்றுவாரிய செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், நமது MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று (29.07.2021) காலை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் வீட்டின் உள் அமைப்பில் கழிப்பறை வழியாக சமையல் அறைக்கு செல்வதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை படுக்கை அறை வழி கழிப்பறைக்கு செல்வதுபோல் மாற்றி அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென MLA அவர்கள் கூறினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய MLA, தமிழ்நாட்டில் முதன்முதலாக குடிசை மாற்றுவாரியமென ஒன்று ஏற்படுத்தி வீடு இல்லாத ஏழை எளிய பொதுமக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான். அவர்கள் வழியில் தமிழக முதல்வர் அவர்கள் குடிசை மாற்று வாரியம் மூலம் ஏழை எளிய பொதுமக்களுக்கு நன்மை செய்து வருகிறார். 

மேலும், சமத்துவபுரம் அருகில் அமைக்கப்பட்டுவரும் குடியிருப்பில் நீர்பிடிப்பு பகுதியில் வீடுகட்டியவர்களுக்கும் வீடோ நிலமோ இல்லாத பொதுமக்களுக்கும் தகுதியின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் இறுதி பட்டியல் தயார் செய்து அதன்பின்பு பயனாளிகள் ஒவ்வொருவரும் 46000 ரூபாய் அரசுக்கு செலுத்தியபின் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்படும் எனவும், அதற்குமுன் வேறுயாரிடமும் பொதுமக்கள் ரூபாயை கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும், இப்பணிகள் எல்லாம் முடிந்து தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படும் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் குடிசை மாற்றுவாரிய உதவி செயற்பொறியாளர் மஜீத், உதவிப்பொறியாளர் ஜேம்ஸ், திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Rajapalayam Constituency MLA S Thangapandiyan Pressmeet 29 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->