வயது வித்தியாசம் பாராமல் முதியவருடன் தகராறு பேச்சு.. பரிதாப பலியான இளைஞர்.!!
Virudhunagar Quarry youngster Murder by Old Man
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டநார்பட்டி பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் ஏரளமான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இதே குவாரியில் காவலாளியாக விருதுநகர் சென்னக்குடி பகுதியை சார்ந்த கருப்பசாமி (வயது 57) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று மாலை நேரத்தில் குவாரியில் பணியாற்றும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சார்ந்த விஷ்ணு (வயது 24) மற்றும் திருவில்லிபுத்தூர் கோட்டையூர் பகுதியை சார்ந்த ஜோதிமணிக்கம் (வயது 25) ஆகியோர் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில், கருப்பசாமியை விஷ்ணு அவதூறாக பேசியதாக தெரியவருகிறது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்த நிலையில், இருவரும் வெளியே சென்றுள்ளனர். பின்னர் இரவில் விஷ்ணு காயத்துடன் கல்குவாரியில் மயங்கி இருந்துள்ளார்.
இவரை கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதிமணிக்கம், உதவிக்கு ஆட்களை வரவழைத்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விஷ்ணுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக ஜோதிமணிக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விசாரணையில் காவலாளி கருப்பசாமி விஷ்ணுவை கொலை செய்தது தெஇர்யவந்துள்ளது. மேலும், வயது வித்தியாசம் பாராமல் விஷ்ணு கருப்பசாமியை தரக்குறைவாக பேசியதால், அவரை அடித்து கொலை செய்ததாக கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Virudhunagar Quarry youngster Murder by Old Man